சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மேலூர் செல்லும் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனஓட்டிகள் சிலர் தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பகுதியில் இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.