சிவகங்கை நகரில் 2 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் காலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே, காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.