அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் வெளிமாவட்டங்களில் இருந்து எண்ணற்ற சிமெண்டு மூட்டைகள் மற்றும் நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் கனரக லாரிகளை முத்துவாஞ்சேரி செல்லும் முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுவதால் அடிக்கடி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் 108 ஆம்புலன்ஸ்களும் பலமுறை நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நின்று விடுகிறது. இதோடு இல்லாமல் வி.கைகாட்டி புற காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலையின் மெயின் கேட் வரை எப்போதுமே புழுதி படலமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.