பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-28 12:38 GMT
கரூர்-பாளையம் சாலையில் சின்னமநாயக்கன்பாட்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. சின்னமநாயக்கன்பட்டி, பெரியார் நகர், மாரியம்மன் நகர், கற்பகாநகர், செல்வம்நகர், அண்ணாநகர், ஜோதி நகர், காத்தாளபட்டி புதூர், செல்லிபாளையம், கொங்கு நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக கரூர் மற்றும் பாளையம் பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். அப்படி பஸ் ஏற வரும் பயணிகளும், பொதுமக்களும் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலையில் வெயில் மற்றும் மழை போன்றவற்றில் தற்காத்துக்கொள்ள நிழல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இங்கு பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி