மேற்கூரை சேதம்

Update: 2022-08-27 12:09 GMT

ஊட்டியில் இருந்து பி.மணியட்டி பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்யும்போது, பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் அதில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அரசு பஸ்சில் சேதம் அடைந்துள்ள மேற்கூரையை சீரமைக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்