கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குள் வரும் லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கிறது. இதனால் அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அரவக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு வேகத்தடை அமைத்தால் அனைத்து வாகனங்களும் வேகத்தை குறைத்து செல்ல வழிவகுக்கும். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.