கால அட்டவணை வேண்டும்

Update: 2022-08-26 11:08 GMT

சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பூர், பல்லடம், கோவை, ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் செல்கின்றனர். ஆனால் ஈரோடு, சேலம் போன்ற ஊர்களுக்கு குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த பஸ்கள் எந்த நேரத்தில் வரும் என்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. எனவே பஸ் நிறுத்தம் முன்பு ஈரோடு, சேலம் போன்ற ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்லும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் கால அட்டவணை வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி