டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2022-08-23 12:35 GMT
அரியலூரில் இருந்து திருமானூர், திருவையாறு, கல்லக்குடி டால்மியாபுரம், வி.கைக்காட்டி, உடையார்பாளையம், பாடாலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து வி.கைக்காட்டி மற்றும் கீழப்பழுவூர் போன்ற பகுதிகளுக்கு டவுன் பஸ் வசதி இல்லை. புறநகர் பஸ்களில் தான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்ல வேண்டும். அந்த பஸ்களும் சில பஸ் நிறுத்தங்களில் நிற்பத்தில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அரசு டவுன்பஸ் வசதி இல்லாத ஊர்களில் டவுன் பஸ் விட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி