பயனற்றுப்போன பயணியர் நிழற்குடை

Update: 2022-08-23 12:27 GMT

கரூர் மாவட்டம், சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் சாலை அருகே இருந்த நிழற்குடையை சர்வீஸ் சாலை அருகே செடி-கொடிகள் முளைத்துள்ள பகுதியில் வைத்துள்ளனர். இதனால் அந்த நிழற்குடையின் அடியில் யாரும் சென்று அமர முடியாதபடி உள்ளது. மேலும் அந்த இடம் சேரும், சகதியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்