ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.