அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெளி ஊருக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் நின்று வெளியூர்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.