போக்குவரத்து இடையூறாக குதிரைகள்

Update: 2022-08-23 10:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர், நல்லாடை, திருக்களாச்சேரி, பூதனூர்,சங்கரன்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், குதிரைகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகளில் வாகனஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்