ஊருக்குள் வராத அரசு பஸ்சால் மாணவர்கள் அவதி

Update: 2022-07-08 18:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், செட்டியாபட்டியில் இருந்து முள்ளூர் கிராமம் வழியாக 12-ம் எண் கொண்ட அரசு பஸ் தினமும் மாலை 6 மணிக்கு புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் முள்ளூர் ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கிவிட்டு சென்ற இந்த பஸ் கடந்த 5 நாட்களாக பயணிகளை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்று விடுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து தங்களின் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழையபடி முள்ளூர் ஊருக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்