கழிவுநீர் கால்வாய் கட்டித்தரப்படுமா?

Update: 2023-08-27 11:17 GMT

வேலூர் சின்னஅல்லாபுரம் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் வடிகால் வசதி இல்லை. கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. சாலைகள் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து விட்டன. ஆனால் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தருவார்களா?

-ஜாகீர்உசேன், தொரப்பாடி.

மேலும் செய்திகள்