வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி 2-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காகப் பள்ளம் தோண்டியபோது, அங்குச் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் உடைந்ததாகத் தெரிகிறது. இதனால், பல வாரங்களாகக் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாய் தெருவில் வழிந்தோடி வீடுகளின் முன்பு தேங்குகிறது. தெருவில் கழிவுநீர் தேங்குவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூங்காவனம், வேலூர்.