வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஆபீசர் தெருவில் பல நாட்களாக கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போடாமல் இருக்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் மூடி போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுவாமிநாதன், தூசி.