வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகரில் நந்தனார் வீதிக்கும், சீனிவாசன் வீதிக்கும் மத்தியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயை தூர்வார வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருமூர்த்தி, வேலூர்.