சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2023-11-26 12:12 GMT

கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட லத்தேரியை அடுத்த அன்னங்குடி கிராமத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியவில்லை. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சாலையில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.எம்.கிருஷ்ணன், அன்னங்குடி.  

மேலும் செய்திகள்