கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2023-09-27 17:14 GMT

குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் கழிவுநீர் அருணாசலநகர், வள்ளலார்நகர் உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஆர்.எஸ். சாலைக்கு செல்லும் வழியில் வெளியேற வழி இல்லாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும், வயல்வெளிகளிலும் குளம்போல் தேங்குகிறது. இது ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது நடக்கிறது. கழிவுநீருடன் குப்பைகளும் சேர்ந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மலர் மன்னன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்