சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-05 10:22 GMT

ஜோலார்பேட்டைைய அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர், மழைநீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-சேகர், முன்னாள் ராணுவ வீரர், ஆசிரியர் நகர்.

மேலும் செய்திகள்