குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2022-09-21 13:08 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் குளம் உள்ளது. அந்தக் குளத்தின் அருகில் உள்ள அரசு பொதுச்சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஓடி குளத்தில் கலக்கிறது. அந்த வழியாக செல்வோர் குப்பைகளை கொண்டு வந்து குளத்தில் கொட்டுகிறார்கள். இதனால் குளம் மாசு அடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தேவதாஸ், தூசி.

மேலும் செய்திகள்