ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2023-09-20 18:00 GMT

சோளிங்கர் பெரிய ஏரியில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து குடிநீரை உறிஞ்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆய்துளை கிணறு இருக்கும் இடத்தின் அருகே திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரும்பி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை ஏரியில் கலக்காதவாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்