கழிவுநீரால் மக்கள் அவதி

Update: 2023-03-01 16:34 GMT

ஜவ்வாதுமலையில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சளாறு போளூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமம் வழியாக செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும். மழை இல்லாத காலங்களில் இந்த ஆற்றை நடைபாதையாக ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிராமத்தில் சிலர் கழிவுநீரை மஞ்சளாற்றில் விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க முடியவில்லை. சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிவுநீரை குழாய் வழியாக எடுத்துச்சென்று வேறு இடத்தில் விட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ராமாபுரம்.

மேலும் செய்திகள்