சேலம் கருங்கல்பட்டி பாண்டவரங்கோவில் தெரு 56-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.