நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2026-08-23 13:53 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி, நேருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தேங்கியுள்ள கழிவுநீரை உடனுக்குடன் அகற்றி கால்வாயை முறைப்படி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்