சுகாதார சீர்கேடு

Update: 2026-08-23 13:27 GMT

ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளி அருகே சாக்கடை கால்வாய் ஓடுகிறது. இந்த சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், குட்டை போல் சாக்கடை தேங்குகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்