மதுரை நரிமேடு அவ்வையார் தெரு சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?