கடும் துர்நாற்றம்

Update: 2026-05-31 10:17 GMT

சூலூர் தாலுகா பள்ளபாளையம் பேரூராட்சி பாரதி புரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரையொட்டி அதிகளவில் புதர் மண்டி கிடக்கிறது. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பதுங்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதர்களை அகற்றவும், கழிப்பிடத்தை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்