குமரலிங்கம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தாண்டக்கவுண்டன் தோட்டம் குடியிருப்பில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்களில் சரியான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கேேய தேங்குகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள்ளேயே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து, கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-குமாரசாமி, கணக்கம்பாளையம்