கோவை லாலி ரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று ேநாய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.