மன்னார்குடி பகுதி ஸ்ரீநகர் குடியிருப்பு பகுதிக்கு எதிரே வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வடிகாலை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.