தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-11-23 10:10 GMT

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் உள்ளதால், இந்த வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்