ஈரோடு வளையக்கார வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் நிரம்பி அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.