மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் சிறு மழை பெய்தாலும் பஸ் நிலையம் உள்ளே அதிகளவில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளே மழை நீர் வடிந்து செல்ல கூடுதல் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.