தோட்டனூத்து ஆர்.எம்.டி.சி. காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில் முறையாக தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.