திண்டுக்கல் முருகபவனத்தில் இருந்து கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.