மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு ஆர்.பி.எஸ். தெரு 2-வது கிராஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது பற்றி பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-விஜயா, மாரண்டஅள்ளி.