எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லிபாளையம் ஊராட்சி செம்பாம்பாளையத்தில் சாக்கடைநீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இதுகுறித்து பலமுறை கிராம சபை கூட்டத்தில் சாக்கடை வசதி கேட்டு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகினர். எனவே சாக்கடை வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செம்பாம்பாளையம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-மதி, எலச்சிபாளையம்.