கம்பைநல்லூர் மையப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் நிரம்பி தெரு சாலைகளில் வெளியேறுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை கம்பைநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இனியன், கம்பைநல்லூர்.