தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் 2-வது வார்டு உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கடந்து செல்லும் போது முகம் சுளிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்திடவும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், மாரண்டஅள்ளி.