மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் அரசு பள்ளி, தனியார் வங்கிகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த வெளிநிலையில் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி மூட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
- கோவிந்தன், மாரண்டஅள்ளி.