தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் டெகிஸ்பேட்டை இப்ராஹிம் குடோன் வீதி உள்ளது. இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல மாதமாக அதே பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்தந பகுதியில் கொசுக்கள் தொல்லையும் அதிகமாகி விட்டது. எனவே இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-முகமது, தர்மபுரி.