தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-06-01 12:53 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை பேங்க் காலனி பகுதியில் சுமார் 500-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்