காரமடை அருகே காளம்பாளையம் திருவள்ளுவர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.