கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

Update: 2025-04-27 17:14 GMT

மதுரை ஆனையூர் மாநகராட்சி 3 -வது வார்டு இந்திரா நகர் மற்றும் கருப்பசாமி நகர் பகுதிகளில் சாக்கடை மற்றும் கால்வாய்களை பல மாதங்களாக தூர்வாராமல் உள்ளனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் சாக்கடை நீர் நிரம்பி சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் தொற்று  நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் கால்வாய்களில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?    

மேலும் செய்திகள்