மதுரை மாவட்டம் மேலூர் நகர் காத்தா பிள்ளை தெரு 14 வது வார்டு உட்பட்ட மார்க்கெட் சாலையில் கழிவுநீரும் குடிநீரும் கலந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?