கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-02-23 16:30 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா சக்கம்பட்டி 11-வது வார்டு கலைஞர்நகர் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்