கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவு பெறுமா?

Update: 2025-01-12 11:48 GMT

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. அதன்படி வடக்கு ராஜவீதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்