பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி பகுதியில் ஏராளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்து முட்புதர்போல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பதியாகி இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.