நோய் பரவும் அபாயம்

Update: 2024-09-15 17:38 GMT

பர்கூர் காரகுப்பம் ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வரை கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையான பராமரிப்பும், தூர்வாரப்படாமலும் உள்ளது. இதனால் கழிவுநீர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-வேலன், பர்கூர்.

மேலும் செய்திகள்